Search This Blog

Sunday, March 27, 2011

முடக்கற்றான் குடிநீர் - Paralysis Medicine

கை, கால்களை நீட்டவும், மடக்கவும் முடியாமல் முடமாக்குகிற வாத நோயை முடக்கு வாதம் என்று கூறுவது வழக்கம்.

இந்த முடக்கை அற்றுப் போகச் செய்கிற கொடிக்கு முடக்கற்றான் முடக்கறுத்தான் என்றெல்லாம் கூறுவார்கள். CARDIOSPERMUM HELICACABUM – என்பது இதன் தாவர இயற்பெயராகும்.

சிற்றூர்கள் செழித்த நகரங்கள் எனப் பாராமல் எல்லா இடங்களிலுமே இது வளர்கிறது.

  1. இந்த முடக்கற்றான் இல்லை ஒரு திமிர் கைப்பிடி அளவு என்பது இதற்கு மேல் அள்ளி எடுக்க இயலாது என்கிற அளவில் கை நிறையத் திமிர திமிர அள்ள எடுப்பதை மேற்கண்ட அளவாகக் கொண்டு:
  2. கட்டை விரலளவு சுக்கு இதை எப்போது பயன்படுத்தினாலும் இதன் மேல் தோலை நீக்கி விட வேண்டும்.
  3. குறுமிளகு 15 கிராம்.
  4. வெள்ளைப் பூண்டு பருமனாக இருந்தால் 3, சிறியதாக இருந்தால் 5.

மேல் தோல் நீக்கி முன், சுக்கு மிளகு, பூண்டு ஆகியனவற்றையும் ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டு ஒரு பழகின மண் கலத்தில் இந்த நான்கு சரக்குகளையும் போட்டு, 8 குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து மூடி வைத்து, ஒரு குவளை ஆகும் படி சிறு தீயில் எரிந்து வற்ற வைத்துக் கொண்டு ஆறிய பின் காலை வெறும் வயிற்றில் 3 முதல் 5 நாள் ஒரு குவளை அளவு குடித்தால் உடல் வலி, முடக்கு ஓடிப்போகும். வாய்ப்பும், நேரமும் உள்ளவர்கள் இதைச் செய்து, அருந்திப் பயன் பெறலாம்.

மற்றவர்கள் ....?

முடக்கற்றான் சூரணத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி சுக்கு, மிளகு, பூண்டு சேர்த்து எட்டுக் குவளை தண்ணீர் சேர்த்து ஒரு குவளையாக சுண்ட வைத்து காலை வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.

No comments:

Post a Comment