கை, கால்களை நீட்டவும், மடக்கவும் முடியாமல் முடமாக்குகிற வாத நோயை முடக்கு வாதம் என்று கூறுவது வழக்கம்.
இந்த முடக்கை – அற்றுப் போகச் செய்கிற கொடிக்கு – முடக்கற்றான் – முடக்கறுத்தான் என்றெல்லாம் கூறுவார்கள். CARDIOSPERMUM HELICACABUM – என்பது இதன் தாவர இயற்பெயராகும்.
சிற்றூர்கள் – செழித்த நகரங்கள் எனப் பாராமல் எல்லா இடங்களிலுமே இது வளர்கிறது.
- இந்த முடக்கற்றான் இல்லை “ஒரு திமிர் கைப்பிடி” அளவு என்பது – இதற்கு மேல் அள்ளி எடுக்க இயலாது என்கிற அளவில் கை நிறையத் திமிர திமிர அள்ள எடுப்பதை மேற்கண்ட அளவாகக் கொண்டு:
- கட்டை விரலளவு சுக்கு – இதை எப்போது பயன்படுத்தினாலும் இதன் மேல் தோலை நீக்கி விட வேண்டும்.
- குறுமிளகு – 15 கிராம்.
- வெள்ளைப் பூண்டு பருமனாக இருந்தால் 3, சிறியதாக இருந்தால் 5.
மேல் தோல் நீக்கி – முன், சுக்கு மிளகு, பூண்டு ஆகியனவற்றையும் ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டு – ஒரு பழகின மண் கலத்தில் – இந்த நான்கு சரக்குகளையும் போட்டு, 8 குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து மூடி வைத்து, ஒரு குவளை ஆகும் படி சிறு தீயில் எரிந்து வற்ற வைத்துக் கொண்டு ஆறிய பின் காலை வெறும் வயிற்றில் 3 முதல் 5 நாள் ஒரு குவளை அளவு குடித்தால் – உடல் வலி, முடக்கு ஓடிப்போகும். வாய்ப்பும், நேரமும் உள்ளவர்கள் இதைச் செய்து, அருந்திப் பயன் பெறலாம்.
மற்றவர்கள் ....?
No comments:
Post a Comment